திருக்குறள்

1230.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயுமென் மாயா உயிர்.

திருக்குறள் 1230

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயுமென் மாயா உயிர்.

பொருள்:

பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.

மு.வரததாசனார் உரை:

( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:

அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.